பப்புவாநியூகினியின் மனுஸ் தீவிலுள்ள 800 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா கைவிட்டுவிட்டதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR குற்றம்சாட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா தனது கடல்கடந்த தடுப்புமுகாம் கொள்கையால் உருவாக்கிய குழப்பங்களுக்கு முழுப்பொறுப்பேற்று, அதற்கு மனிதாபிமான ரீதியிலான தீர்வைக் காண வேண்டுமென UNHCR-இன் பேச்சாளர் Cecile Pouilly வலியுறுத்தியுள்ளார்.
மனுஸ்தீவிலுள்ள அகதிகள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் எதிர்காலம் என்ன என்று தெரியாமல் வாழ்கின்ற பின்னணியில், ஆஸ்திரேலியா தனது பொறுப்பினை உணர்ந்துகொள்ளவேண்டுமென தாம் மீண்டும் வலியுறுத்துவதாக Cecile Pouilly தெரிவித்தார்.
