SKIP TO MAIN CONTENT

‘விடுமுறை நாள் கூடுதல் ஊதியமுறை லேபர் ஆட்சியில் மீண்டும் நடைமுறைக்கு’

Bill Shorten is warning low paid workers stand to lose hundreds of dollars over Easter as he piles pressure on Scott Morrison over penalty rate cuts.
Bill Shorten is warning low paid workers stand to lose hundreds of dollars over Easter as he piles pressure on Scott Morrison over penalty rate cuts. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

விடுமுறை நாட்களில் வேலைசெய்யும் hospitality, retail, pharmacy மற்றும் fast-food துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் penalty  rates-உடனான அதிக கொடுப்பனவில் லிபரல் அரசு மாற்றம் கொண்டுவந்திருந்தநிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் அதிக கொடுப்பனவு நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்படும் என லேபர் கட்சி உறுதியளித்துள்ளது.

லேபர் கட்சி இது தொடர்பாக கூறியபோது - விடுறைக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு கொடுக்கவேண்டிய கூடுதல் ஊதியமுறையை லிபரல் ஆட்சி இயந்திரம் கடந்த 2017 இல் மாற்றியது .

இந்தமுறை ஈஸ்டரில் பத்து நாட்கள் விடுமுறை நாட்களாக கிடைக்கப்பெற்றபோதும் இந்த நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 220- முதல் 370 டொலர்கள் கூடுதல் ஊதியம் தற்போதைய லிபரல் ஆட்சியினரால் பறிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் லிபரல் ஆட்சியினரால் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறையை நீக்குவதற்கு 8 தடவைகள் லேபர் கட்சி எதிராக வாக்களித்தது. ஆனால், லிபரல் கட்சி அதற்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது.

லேபர் கட்சி ஆட்சிக்கு வருமானால் - தேர்தல் இடம்பெறப்போகும் மே 18 ஆம் திகதியிலிருந்து - நூறு நாட்களில் இந்த விடுமுறை நாள் பணியாளர்களுக்கான கூடுதல் ஊதியத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரும் - என்று உறுதியளித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now