வெளிநாடுகளிலிருந்து விக்டோரியா திரும்பும் ஆஸ்திரேலியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், விடுதிகளிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை என மாநில Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீக்கவுள்ள பின்னணியில் விக்டோரியாவும் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதன்படி நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் விக்டோரியா வரும் ஆஸ்திரேலியர்கள்(முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள்) மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள் விடுதிகளில்/வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை.
விமானப் பயணம் மேற்கொள்ளும் நபர், குறித்த பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளும் கோவிட் சோதனையில் எதிர்மறை முடிவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், விக்டோரியா வந்திறங்கிய 24 மணிநேரங்களுக்குள் கோவிட் சோதனையை மேற்கொள்வதற்கு இணங்கும் பட்சத்தில் அவர் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார் என Premier Daniel Andrews தெரிவித்தார்.
ஏற்கனவே உள்ள நோய்நிலைமைகளால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்களும், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும்கூட கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை என குறிப்பிடப்படுகிறது.
இனிவரும் நாட்களில் கட்டாய விடுதி தனிமைப்படுத்தல் திட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடுதிகளே பங்கேற்கும் எனவும், தடுப்பூசி போட்டிராத அல்லது ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை தனிமைப்படுத்தவென இவ்விடுதிகள் பயன்படுத்தப்படும் எனவும் Daniel Andrews தெரிவித்தார்.
பின்வரும் தடுப்பூசிகள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கபடுகின்றன.
• Pfizer (Comirnaty)
• AstraZeneca (Vaxzevria)
• Moderna (Spikevax)
• COVID-19 Vaccine Janssen (Johnson and Johnson)
• Coronavac (Sinovac)
• Covishield (AstraZeneca/Serum Institute of India)
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.