தூத்துக்குடியில் இலக்கு வைத்து ஸ்னைப்பர் மூலம் சுட்டது சரிதானா?

Source: Raj
தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அரசு நியாயப்படுத்துகிறது. மக்களை எச்சரிக்கும் நடவடிக்கையாக கண்ணீர்புகை, அல்லது வானை நோக்கிச் சுடுதல், ரப்பர் புல்லட் பயன்படுத்தல், அல்லது காலை நோக்கி சுடுதல் போன்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக மனித உரிமையாளர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்தும், அடுத்து என்ன நடக்கும் என்றும் அலசுகிறார் இந்தியாவின் Frontline பத்திரிகையின் Associate Editor மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் தமிழக அரசியலை அலசுகின்றவருமான R.K.ராதாகிருஷ்ணன் அவர்கள்.
Share

