Anthology எனப்படும் தொகை வடிவம், தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. தமிழ் திரைப்படம் ஒன்று முதல் தடவையாக திரைத்தொகையாக வெளியாகியுள்ளது. 6 அத்தியாயம் என்ற திகில் திரைப்படம், ஆறு வேறுபட்ட இயக்குனர்கள் எழுதி இயக்கிய முழு நீளத் திரைப்படமாகும். அந்த ஆறு இயக்குநர்கள், கேபிள் சங்கர், ஷங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, E A V சுரேஷ், லோகேஷ் ராஜேந்திரன், மற்றும் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரையும் ஒரே நேரத்தில் குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டுள்ளார். இந்த நேர்காணல், பொதுமக்கள் பார்வைக்குத் திரைப்படம் வெளியிடுவதற்கு முதல்நாள் பதியப்பட்டது என்பதும் இந்தத் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.