கடந்த வருட இறுதியில், ரெஜித்குமார் என்பவர், தனக்குப் பணிக்கப்பட்ட ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக சிட்னி வந்திருந்தார். உலகம் முழுசவதும் முருக யுகம் ஆரம்பிக்கிறது என்றும், அதனை நிலைநாட்டுவது தான் தனக்கு வழங்கப்பட்ட கடமை என்றும் சொல்கிறார் ரெஜித்குமார். அதில் உள்ள உண்மைத் தன்ன்மையைக் கேள்வி எழுப்புகிறார் எதையும் ஆராய்ந்து அறிய முற்படும், எழுத்தாளர் நக்கீரன். கனடாவில் டொரொண்டோ நகரில் வாழும் நக்கீரன் அவர்கள் சோதிடப்புரட்டு என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார் என்பதும், தொடர்ந்து தனது ஆய்வுக்கட்டுரைகளை இணையத்தளங்களில் எழுதி வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் இந்த நிகழ்ச்சி, ரெஜித்குமாருடனான நேர்காணலின் இரண்டாவது பாகம். முதல் பாகம்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/lord-murugas-kingdom-coming?language=ta