ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டம் தற்போது ஜெனீவா நகரில் நடந்துகொண்டுள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்த பின்னணியில் நடைபெறும் கூட்டம் இது என்பதால் இலங்கை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த கூட்டம் தொடர்பான தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜெனீவா நகரிலிருந்து கனடா நாட்டின் “பறை” இணைய இதழின் செய்தியாளர் மு.க.தமிழ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share





