பேராசிரியர் ஆசி.கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் இலக்கியம் படைக்கும் மிகச் சிலரில் ஒருவர். அவரின் பல புனைவுகள், சிறுகதைகள் பெரும் பாராட்டுகளை வாங்கிக் குவித்தவை. இலக்கியத்திற்காக பல விருதுகளை வாங்கிய அவர் எழுதிய “முன்னிரவு மயக்கங்கள்” எனும் சிறுகதை அவரின் “உயரப்பறக்கும் காகங்கள்” நூலில் இடம்பெற்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக, 2004 ஆம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலித்த இந்த கதையை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கதையை வாசித்தவர்கள்: பாலசிங்கம் பிரபாகரன் & திலகா பிரபாகரன். தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





