கதாநாயகனை விட வில்லனாக நடிப்பதே சுவாரசியம் - வேணு அரவிந்த்
Venu Aravind
மேடைக் கலைஞர், சினிமா இயக்குனர், சின்னத்திரைக் கலைஞர் என்று பன்முகம் கொண்ட நடிகர் திரு வேணு அரவிந்த். 1999ல் கே.பாலச்சந்தரின் "காசளவு நேசம்" தொடரில் பிரபலமாகி பின்னர் "அலைகள்" தொடரில் ரங்கா கதாபாத்திரம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். "சபாஷ் சரியான போட்டி" திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தற்பொழுது நடிகை ராதிகாவுடன் "வாணி ராணி" சின்னத்திரைத் தொடரில் பூமிநாதன் கதாபாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். திரு வேணு அரவிந்த் நம்மோடு தனது அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துக் கொள்கிறார். அவரோடு உரையாடுபவர் நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் செல்வி
Share



