காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மீள் கட்டமைப்பிற்காக ஒரு பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ள மாநில ப்ரீமியர், மறுகட்டமைப்பு உடனடியாக ஆரம்பமாகிறது என்று அறிவித்துள்ளார். சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாடசாலைகள் போன்ற முக்கியமான உட்கட்டமைப்பு பணிமானங்களைத் திருத்தம் செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, இந்த வேலைகளுக்கு தனியார் நன்கொடைகளும் வழங்கப்பட்டுள்ளன உள்ளன. மிகப்பெரியது சுரங்க அதிபர் Andrew Forrest 70 மில்லியன் டொலர்கள் வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம், ஆஸ்திரேலியாவின் எதிர்கால செழிப்பை உண்டாக்கும் ஐந்து முக்கிய தொழில்களில் ஒன்று சுற்றுலா என்று அடையாளம் காட்டியிருந்தாலும், காட்டுத் தீயினால் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளதால் அதை நம்பி வாழும் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
Lucy Murray, Jennifer Scherer மற்றும் Sonia Lal ஆகியோர் எழுதிய விவரணங்களை அடிப்படையாக வைத்து தமிழில் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.





