நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்துவருகின்றனர். இவ்வேளையில், மெல்பன், சிட்னி போன்ற நகரங்களில் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், கட்டாய தடுப்பூசிக்கு எதிராகவும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. ஆர்ப்பாட்டம் செய்வது எங்கள் உரிமை என்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: லலிதா செல்லையா அவர்கள். அவர் மெல்பர்ன் நகரில் தாதியாக (Nurse) ஆக பணியாற்றுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





