மெல்பனிலுள்ள ஒரு தேர்தல்தொகுதியான Dunkleyயில் வருகிற சனிக்கிழமை, மார்ச் மாதம் 2ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பீட்டர் டட்டன் மற்றும் அந்தோனி அல்பானீஸ் ஆகிய இருவரும் தத்தமது இறுதிநேரப் பிரசாரங்களில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். லிபரல் மற்றும் லேபர் ஆகிய இரு கட்சிகளுக்கும் இத் தேர்தல் முக்கியமாதொன்றாகப் நோக்கப்படுகிறது. இத்தேர்தல் குறித்த பின்னணி, இருகட்சிகளுக்குமான இத்தேர்தலின் முக்கியத்துவம் போன்ற பல விடயங்களை அலசுகிறார் அரசியல் அவதானியும் வானொலியாளருமான நவரட்ணம் ரகுராம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune inபக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





