கவி நா. காமராசன்: இறுதி நேர்முகம் – பாகம் 1
Raj Source: Raj
புதுக்கவிதை உலகின் பிதாமகன்களில் தலையாயவர் கவியரசர் நா. காமராசன். புதுக்கவிதையில் வானம்பாடியாக பறந்தவர் அவர். இன்றைய புதுக் கவிதை வடிவத்தின் நவீன சிற்பி. நா. காமராசன் அவர்கள் சுகவீனமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் பேட்டி ஒன்றிற்காக அவரைத் தொடர்புகொண்டதும் சரி என அவர் ஒத்துக்கொண்டார். அவரது மனைவியின் உதவியுடன் பேசினாலும், அவரால் விரிவாக தொலைபேசி வழி பேச இயலவில்லை. எனவே உடல் நலம் தேறியதும், பேட்டியைத் தொடர்வோம் என்று கூறி அந்த பேட்டியை முடித்துக்கொண்டேன். பின்னாளில் முழுமையான ஒரு பேட்டியை எடுத்தபின் ஒலிபரப்புவோம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் நம்மைவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். எனவே, கனத்த இதயத்துடன் நா. காமராசன் வழங்கிய இறுதிப் பேட்டியை ஒலியேற்றுகிறோம். இந்த நேர்முகம் கவியரசர் நா. காமராசன் அவர்கள் வழங்கிய இறுதி நேர்முகம் என்று நம்பப்டுகிறது.
Share



