கவி நா. காமராசன்: இறுதி நேர்முகம் – பாகம் 2
Raj Source: Raj
கவியரசர் நா. காமராசன் அவர்கள் திரைப்படபாடல்கள் எனும் பரந்த வெளியில் அவர் பெரும் புகழ் பெற்றாலும், அவரின் இலக்கிய வீச்சுக்கும், வசீகர, கவித்துவ வார்த்தைகளுக்கும் ஈடு இணையில்லை. மட்டுமல்ல, படாதபாடுபடும் மக்களை பாடுபொருளாக்கி, இலக்கியக் கண் வழியே சமுதாயத்தைப் பார்க்கச் செய்தவர். கல்லூரி மாணவராக மொழிப்போர்க் களத்தில் இறங்கி, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, விலங்குடன் சிறையிடப்பட்டப் போராளி நா.காமராசன். நா. காமராசன் அவர்கள் சுகவீனமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் பேட்டி ஒன்றிற்காக அவரைத் தொடர்புகொண்டதும் சரி என அவர் ஒத்துக்கொண்டார். அவரது மனைவியின் உதவியுடன் பேசினாலும், அவரால் விரிவாக தொலைபேசி வழி பேச இயலவில்லை. எனவே உடல் நலம் தேறியதும், பேட்டியைத் தொடர்வோம் என்று கூறி அந்த பேட்டியை முடித்துக்கொண்டேன். பின்னாளில் முழுமையான ஒரு பேட்டியை எடுத்தபின் ஒலிபரப்புவோம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் நம்மைவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். எனவே, கனத்த இதயத்துடன் நா. காமராசன் வழங்கிய இறுதிப் பேட்டியை ஒலியேற்றுகிறோம். இந்த நேர்முகம் கவியரசர் நா. காமராசன் அவர்கள் வழங்கிய இறுதி நேர்முகம் என்று நம்பப்டுகிறது.
Share



