“சாதிப்போர் நடக்கும் ஊரல்ல, சாதிப்போர் கொண்ட ஊர்!”

Source: SBS Tamil
எழுத்தாளர் ப.இசக்கிராஜன் அவர்களின் எழுத்தில் உருவாகியிருக்கும் நூல் “பாளையங்கோட்டை நினைவலைகள்”. இது அவரின் முதல் நூல் என்றபோதிலும், எழுத்துகளின் தரம், சுவை, தகவல் அனைத்துமே அவரை ஒரு தேர்ந்த படைப்பாளியாக முன்னிறுத்துகிறது. இன்றுள்ள பாளயங்கோட்டையின் பிராந்தியங்கள் அன்றைய காலகட்டத்தில் எப்படி இருந்தன, அந்நகரின் ஆளுமைகள், தொழில் வளர்த்தவர்கள், கல்வியாளர்கள், தெருக்களின் பின்னணி என்று எளிதில் கிடைக்காத பல தகவல்களை இந்த நூல் முன்வைக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்துவரும் எழுத்தாளர் ப.இசக்கிராஜன் அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
Share


