இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். இதே நேரம் கலாமின் நான்காவது நினைவு தினத்திலேயே மாநில அரசும், மத்திய அரசும் அப்துல் கலாமைப் புறக்கணித்துள்ளன என்று அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் .
Share




