இலங்கையில் அரச பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், அவர்கள் இலங்கைக்கு வெளியே சென்றாலும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது இலங்கை ஓய்வூதியத் திணைக்களம். அப்படி ஓய்வூதியம் பெற்று வருபவர்களில் ஒருவரான,மெல்பேர்ணில் வாழும் திரு சபாபதிப்பிள்ளை, இலங்கைத் தூரகத்தில் பணியாற்றும் சந்தன வீரசேனா, மற்றும் இலங்கையிலே பல பெரும் நிறுவனக்களின் நிர்வாகக் குழுக்களில் பணியாற்றி, தற்போது, சிட்னியில் வாழும் திரு சாமி பசுபதி ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். மேலதிக விபரங்களை, இலங்கை ஓய்வூதியத் திணைக்களத்தின் http://www.pensions.gov.lk/index.php/ta-in என்ற இணையத்தளத்தில் பெறலாம்.