சிவன், முருகன், விநாயகர், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்களைப் பற்றிய புராணத்தை நாம் அறிவோம். ஆனால், தமிழ்நாட்டின் மிகவும் பொதுவான, பிரபலமான தெய்வமான அய்யனார் வரலாறு மிகச் சிலருக்கே தெரிந்திருக்கிறது. அனைத்துத் தமிழ் மக்களினதும் பரம்பரை வாழ்க்கை முறைத் தத்துவமான ஆசீவகம் குறித்து பேராசிரியர் கே. நெடுஞ்செழியன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.