கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஒருவகையான கட்டுப்பாட்டில் வாழ்ந்துவருகின்றனர். தற்போது விக்டோரியா மற்றும் NSW மாநிலங்களில் வாழ்கின்றவர்கள் lockdown நிலையில் வாழ்கின்றனர். இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றனர், தடுப்பூசிக்கு ஏன் இன்னும் சிலர் தயங்குகின்றனர், வெளிநாடு பயணம் செல்ல இயலவில்லையே என்று பல கேள்விகளோடும், ஆதங்கங்களோடும் பரிமாற்றம் நிகழ்ச்சி.
இதில் கலந்துகொண்டவர்கள்: QLD மாநிலத்தின் Townsville நகரிலிருந்து மருத்துவர் சிவஞானம் கிட்டினன் (மேல் இடது), மெல்பன் நகரிலிருந்து சாந்தி சந்திரகுமார் (மேல் வலது), பெர்த் நகரிலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணா ஸ்ரீனிவாசுலு (கீழ் வலது), சிட்னி நகரிலிருந்து மீனாட்சி மகாலிங்கம் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




