Oxford-AstraZeneca தடுப்பூசி தொடர்பில் ஐரோப்பாவில் கவலைகள் இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் அத் தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளனர். ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தி வைத்துள்ளன. தடுப்பூசியுடன் இரத்த உறைவுகளை இணைப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனினும் ஆஸ்திரேலியாவிலும் AstraZeneca தடுப்பூசி இடைநிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. Greg Dyett தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share




