மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள World Report 2020 எனும் அறிக்கை ஆஸ்திரேலியாவின் புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகள் தொடர்பிலான கொள்கைகளை விமர்சிக்கிறது. ஊடக சுதந்திரம், பூர்வகுடியின மக்களின் உரிமைகள் மற்றும் வயோதிபர் பராமரிப்பு ஆகியவை தொடர்பிலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதாவது Human Rights Watch வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share





