மக்களாட்சியின் மணிமகுடம் என்று சொல்லப்படும் அமெரிக்காவின் அதிபர் Barack Obama, விடை பெறுகிறார் என்பது நாம் அறிந்த செய்தி. அமெரிக்க அதிபராக அவர் ஆற்றிய கடைசி உரையில் அமெரிக்க மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். மக்களாட்சியைக் கடைசி வரை காப்பாற்றுங்கள் என்பது தான் அவர் கோரிக்கை. பொருளாதார சமத்துவமின்மை, இன வேறுபாடுகள் முதன்மை பெறுதல், மற்றும் மக்கள் தத்தம் பிரச்சனைகளோடு நின்றுவிடுதல் என்று மூன்று விடயங்கள் அமெரிக்காவின் மக்களாட்சி முறைக்கு ஆபத்தைக் கொண்டுவரக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து Greg Dyett எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.