நீங்கள் வீட்டிலிருந்தும் வேலையிடங்களிலிருந்தும் வீசி எறியும் கழிவுப் பொருட்களுக்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது நாள் வரை அவற்றின் பெரும் பகுதியை சீன நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தன. தற்போது, வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் கழிவுப்பொருட்களின் மீது, சீன அரசு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. அதன் தாக்கம் விரைவில் ஆஸ்திரேலியாவில் தெரிய வரப் போகிறது. கழிவுப்பொருட்களும் தேவையற்ற பொருட்களும் landfill எனப்படும் குப்பைகளைக் கொட்டி நிலநிரப்பல் செய்யப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், உள்ளூராட்சி சபைகளுக்கு நாம் கட்டும் வரி உயரப் போகிறது என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது குறித்து Rashida Yosufzai எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.