கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள்

Mathare slum in the Kenyan capital, Nairobi

Mathare slum in the Kenyan capital, Nairobi Source: Getty

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் Scott Morrison அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 10 மில்லியன் COVID-19 சோதனைக் கருவிகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விக்டோரிய மாநிலத்திலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.


கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உலக வல்லரசு நாடுகள் அதிக அக்கறை செலுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் Antonio Guterres அங்கலாய்த்துள்ளார்.

இதே வேளை, மெல்பேர்ணிலுள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் அது குறித்த விசாரணை ஒன்றை விக்டோரிய மாநில சுகாதார அதிகாரிகள் ஆரம்பித்துள்ளார்கள்.

இவை குறித்தும், இன்றைய கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் குறித்து SBS செய்திப் பிரிவின் Brett Mason, Sonia Lal, Lin Evlin, Greg Dyett, மற்றும் Peggy Giakoumelos ஆகியோர் எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now