விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதினால் விக்டோரியர்களுக்கு அனைத்து மாநிலங்களும் தங்களின் எல்லைகளை தற்காலிகமாக மூடி உள்ளன என்பது நாம் அறிந்த செய்தி.
N.S.W விக்டோரியா எல்லையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் N.S.W விக்டோரியா எல்லை பகுதியில் உள்ள Alburyயில் வசிக்கும் இந்துசா மற்றும் சங்கமித்ரை இருவரும் வாரத்தில் ஐந்து நாட்கள் எல்லையை கடந்து விக்டோரியாவின் Wodongaவிற்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் இருவரும் தாங்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் விடயங்களை எமது தயாரிப்பாளர் செல்வியுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
Share





