COVIDSafe என்ற செயலியை இதுவரை 2 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர். மேலும் குறைந்தது 10 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்துவார்கள் என்று அரசு நம்புகிறது. ஆனால் இந்த செயலி மூலம் அரசு தம்மை கண்காணிக்கக் கூடும் என்றும், அது தனி மனித உரிமைகளுக்கு விரோதமானது என்றும் சிலர் வாதிடுகிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பெரியளவில் பரவுவதைத் தடுக்க மட்டுமே இந்த செயலி பயன்படுத்தப்படும் என்று அரசு சொல்கிறது. இதனை நாம் தரவிறக்கம் செய்வது நல்லது தானா என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில், Australian Strategic Policy Institute என்ற ஆய்வு மையத்தில் Strategic Policing and Law Enforcement என்ற துறையின் தலைவர் Dr John Coyne, மற்றும் மக்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் Civil Liberties Australia என்ற அமைப்பின் துணைத்தலைவர் ராஜன் வெங்கடராமன் ஆகியோரின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.





