இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்ந்து நீடிப்பதா என்பது தொடர்பில், இலங்கையின் மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளை நேரில் ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கை சென்றுள்ள ஐவர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் ஆளுந்தரப்பினரையும் எதிரணியினரையும் சந்தித்து பேசி வருகிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரிச்சலுகையை நீக்குமாறு கோரியுள்ளனர். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





