Covid-19 கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் குடியுரிமையுள்ளவர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுள்ளவர்களுடன் ஆஸ்திரேலியாவிற்குப் பயணிக்க முடியும். அதனால், பெற்றோரையும் நெருங்கிய உறவினர் என்று கணிக்க வேண்டும் என்ற உந்துதல் வலுப்பெற்று வருகிறது.
பத்தாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நம்பிக்கையை தரும் ஒரு மனு, நாடாளுமன்றத்தில் அரச உறுப்பினர் ஒருவரால் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து Catalina Florez எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





