“தமிழ்த் திரைப்பட இசையின் கலைக்களஞ்சியம்” என்று அழைக்கப்படுபவரான சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் தென்னிந்திய தொலைக்காட்சித் துறையின் ஒரு மூத்த தயாரிப்பாளர். தொலைக்காட்சித் துறையில் 1994ஆம் ஆண்டிலிருந்து பல புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ள இவர், இசை ஆர்வலர்களின் மனதில் தனி இடம் பெற்றுள்ளார்.
Covid-19 முடக்க காலத்தில் இவர் ஆரம்பித்த Quarantine from Reality (QFR) என்ற நிகழ்ச்சித் தொடர் தற்போது 500ற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளது.
சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் பின்னணி குறித்தும், QFR நிகழ்ச்சித் தொடர் குறித்தும், மிகவும் அரிதான மற்றும் சுவாரசியமான விடயங்களை அவர் நினைவு கூரும் ஞாபக சக்தி குறித்தும் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





