வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் நாம் அனைவரும் அனுபவிக்கும் மனநிலை மாறும். சிலரின் மனநிலைகள் வழக்கத்திற்கும் மேலாக மாறும். உளவியல் நோய்களில் ஒன்றான Manic depression அல்லது Bipolar என்று அழைக்கப்படும் மன அழுத்தக் கோளாறு பற்றி விளக்குகிறார் சிட்னியில் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக மனநல மருத்துவராகப் பணியாற்றிய திருமதி லக்ஷ்மி நல்லையா. அவரோடு உரையாடுபவர் குலசேகரம் சஞ்சயன்.