அனிதாவின் மரணம் ஏற்படுத்தும் அதிர்வலைகள்!
Raj Source: Raj
தமிழகம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்கின்ற மாணவி 'நீட்' தேர்வு காரணமாக மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளே கரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அனிதாவின் உடலுக்கு கட்சி பாகுபாடுயின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அனிதாவின் மரணத்திற்கு 'நீட்' தேர்வே கரணம் என்று கூறி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அனிதாவின் மரணம் நீட் தேர்வை முடிவுக்கு கொண்டுவருமா? தமிழகத்தில் இருந்து நமது செய்தியாளர் ராஜ்.
Share



