இந்தியாவை கொரோனா கொண்டுவந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் வகையில் ரூ 20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது தெரிவித்தார். தன்னிறைவு இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5 நாட்களாக திட்டங்கள் தொடர்பான அம்சங்களை விளக்கி வருகிறார். இவை எல்லாம் இந்தியாவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும் 20-லட்சம் கோடியை மத்திய அரசு திரட்ட என்ன செய்யப்போகிறது என்ற பெரிய கேள்வியையும் பொருளாதார வல்லுநர்கள் எழுப்புகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





