இலங்கையின் 8 வது நிறைவேற்று அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த வேளையில் பதவியேற்றுள்ள அவர் முன் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் மறுபுறம் அவர் பதவி விலக வேண்டும் என்று கூறும் போராட்டக்காரர்கள் இவ்வாறு பல சவால்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதேவேளையில் இன்று அதிகாலை காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஒன்றை படையினர் மேற்கொண்டுள்ளார்கள்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





