இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் எதிரணியினர் மிகக்கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசுக்கெதிரான போராட்டக்காரர்கள் இந்த அவசரகாலச் சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்டு வரும் சூழலும் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்கள் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் தற்போது தென்பகுதி மக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





