இலங்கையில், தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக வரவுள்ள புதிய சட்டம் ஆபத்தானது என்று, மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். அத்துடன், இலங்கையின் பல பகுதிகளின் காணப்படும் வரட்சி காரணமாக பல லட்சம் மக்கள் மற்றும் அவர்கள் விவசாயம் பாதிப்படைந்துள்ளதுடன் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதனால் மக்கள் பலத்த அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.