இலங்கையில், எல்லைதாண்டி வந்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து வடக்கில் பல இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதேவேளையில், இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வை தருமாறு கோரிக்கை முன்வைத்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 15ம் திகதி முதல் தொடர் கவனயீர்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




