2022 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது வரவு செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது. விலையேற்றம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் எந்த நன்மைகளையும் வழங்கவில்லை என எதிரணியும், காலத்திற்கு பொருத்தமான வரவு செலவுத்திடட்டமாக இது உள்ளதாக ஆளுந்தரப்பும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொது மக்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.





