நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில் தமக்கு கிடைக்கும் நாளாந்த ஊதியம் போதாமலுள்ளது என்ற நிலையில் மலையக மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். மறுபுறம் ஏற்கனவே அரசு நிர்யணம் செய்த தினசரி ஆயிரம் ரூபா ஊதியத்தை சில தோட்ட நிறுவனங்கள் வழங்காமலுள்ள நிலையில், தமது ஊதியத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரி மலையகப் பகுதிகளில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இதேநேரம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இம்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் ஒன்று கூடி பேசி உள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





