இலங்கை கொழும்பு - காலி முகத்திடலில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் 6வது நாளாக தொடர்கின்றது.
. இதேவேளையில் நாட்டின் பல பகுதிகளிலும் அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் மிகவும் குறைவாகவே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில் தற்போதுள்ள இலங்கையில் நிலைமை தொடர்பில் தமது கருத்துக்களை தமிழ் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





