இலங்கையில் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசுகையில் அவர் வெளியிட்ட அறிவிப்பிற்கு அனைத்துக் கட்சிகளும் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளன.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
——-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





