இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் சிறுபான்மையின மக்களின் கட்சிகளின் பிரதிநிதிகளை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அவர்கள் தமது நிலைப்பாடுகளை அதிபரிடம் எழுத்துக் கூறியுள்ளார்கள்.
இதேவேளையில், ஏறக்குறைய 04 மாதங்களாக தொடர்ந்து அரசுக்கெதிரான போராட்டங்களை மேற்கொண்டு வந்த போராட்டக்காரர்கள் கடந்த புதன் கிழமையிலிருந்து காலிமுகத்திடல் பகுதியிலிருந்து இருந்து வெளியேறியுள்ளார்கள்.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





