ஐ.நா.வின் 76 வது பொதுச் சபைச் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்த இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ, கடந்த வாரத்தில் ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்திருந்தார். இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐ.நா செயலாளரிடம் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.
Share





