கொரோனா பரவல் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில் நாடுமுழுவதும் வழங்கப்படும் அரசின் உதவித்திட்டங்கள் மலையக மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மக்களும் அரசியல் தலைவர்களும் குற்றச்சாட்டு. நாடுமுழுவதும் தொடரும் ஊரடங்குச்சட்டத்தின் மத்தியில் சித்திரை புதுவருட கொண்டாட்டங்களையும் சம்பிரதாயங்களையும் குடும்ப உறவுகளுக்குள் மட்டுப்படுத்துமாறு அரசு கோரிக்கை. நாடாளுமன்ற தேர்தலை நடத்த அரசு முயற்சி: தற்போதுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் பின் பிளைவுகள் மோசமானதாகிவிடும் என ஜே.வி.பி எச்சரிக்கை. இவை குறித்த செய்தித் தொகுப்பினை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share





