இலங்கையில் கடந்த 5 வருடகாலமாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையான ஆயிரம் ரூபா ஊதிய அதிகரிப்பை நிறைவேற்றுவதாக 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆயிரம் ரூபா தினசரி அடிப்படை ஊதியமாக இருக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது குறித்தும் அரசின் இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் வெளியாகும் பல்வேறு கருத்துக்களையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





