இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து, விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை அறுவடைக்காலம் என்பதனால் விவசாயிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றார்கள். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் காத்து நிற்கிறார்கள்., வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.
இந்த நிலையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மின்சாரம் துண்டிப்பு மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





