இலங்கையில், தமிழ் மக்கள் நலன்கருதி கொள்கையில் ஒன்றுபட்ட கட்சிகள் இணைய வேண்டும் என்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் கேரிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். அத்துடன், யாழ். மாவட்டத்தில் சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க த.தே. கூட்டமைப்பு டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசியதாக EPDP தெரிவிக்கும் குற்றச்சாட்டை M A சுமந்திரன் மறுத்துள்ளார். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.