இலங்கையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக நீடித்த யுத்தகாலத்தில் படையினர் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை தமது தேவைகளுக்கு பயன்படுத்திய அம்மக்களை இடம்பெயரச் செய்த நிலையில், தற்போது தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மக்களின் காணிகளை சுவீகரித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் பல ஆண்டுகளாக அரச நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மக்களை கைது செய்வதும் அங்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தடை விதித்தும் வருகின்றார்கள். இதனால் மக்கள் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.
டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.





