SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியது ஏற்படுத்தும் விமர்சனங்கள்

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து நாட்டிலிருந்து கடந்த வெள்ளி இரவு கொழும்பை சென்றடைந்தார். பலத்த பாதுகாப்பின் மத்தியில் அவர் தற்பொழுது தங்கவைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கைகள் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share