இலங்கையில், எதிர்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்படவேண்டும் என்றும் இல்லையேல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் கூட்டு எதிரணி வலியுறுத்துகிறது. அத்துடன், வடக்கு கிழக்கு அபிவிருத்தி அதிபர் தலைமையில் விசேட செயலணி ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது. அதன் முதல் கூட்டத்தினை வடமாகாண முதல்வர் புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்