இலங்கையில், காணாமல் போனவர்கள் தொடர்பில் அதிபர் சிறிசேனவுடனான சந்திப்பு திருப்திகரமாக இல்லை என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள். மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இடைக்கால அறிக்கையில் வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்பது தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் நடைபெறுகின்றன. இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.